அருணகிரிநாதர் பாடியது திருப்புகழ். முருகன் அடியெடுத்துக் கொடுக்க பாடும் பாக்கியம் பெற்றவர் அருணகிரிநாதர். “திருப்புகழைப் பாடப்பாட வாய் மணக்கும்”, என்பர், ஆனால் வாழ்க்கையே மணக்கும் என்பது அனுபவ உண்மை. நினைக்க முக்தி அருளும் திருவண்ணாமலையில் முருகன் மயில் மீது தோன்றி,” உலகம் உய்யத் திருப்புகழ் பாடு அருணகிரி” என்று அருள் புரிய அருணகிரியார்,”முறைகளாலும் சாற்றுதற்கரிய புகழுடைய முருகா, உன்னை ஏடெழுதா ஏழையாகிய சிறியேன் எங்ஙனம் பாடுவேன்” என்று கூற முருகப்பெருமான் “உன் நாக்கை நீட்டு” என்று சொல்லி வேலின் நுனியால் “ஓம்” எனும் மந்திரத்தை அவரது நாவில் எழுதி தனது செங்கனிவாய் மலர்ந்து செந்தமிழால் “முத்தைத்தரு” என்று அடியெடுத்துக் கொடுக்க ,மடைதிறந்த வெள்ளம் போலத் திருபுகழைப் பாடினார் அருணகிரிநாதர். திருபுகழின் சந்ததிற்கு இணையான ஒன்று எந்த மொழி இலக்கியதிலும்மில்லை என்றால் அது மிகையல்ல. விந்தையான சந்தம் கொண்டு கேட்பவர் தம் சிந்தை கவர்வது “திருப்புக